சு த்தம்! சுத்தம்! மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப்பிறகு அரண்மனை வளாகம், மாமணி மண்டபம், கோட்டை, கொத்தளம் வாயில்கள்,.. யாவும் கூட்டிப் பெருக்கி ஒரு தூசியோ துரும்போ அல்லாமல் துடைத்தெடுத்த சுத்தத்தில் இருந்தது. இதைவிடவும் படுசுத்தமாக இருந்தது சமஸ்தானத்தின் கஜானாதான்! கிடங்கிலிருக்கும் தானிய இருப்பைக் கூட்டி அள்ளினால் பதக்குத் தேறாது. ஒரு வார காலம் கொண்டாடு, கொண்டாடெனக் கொண்டாடித் தீர்த்த மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொடுக்க, வழங்க, அள்ளி இறைத்ததில் கஜானா சுத்தம்! படுசுத்தம்! கஜானாவை மீண்டும் நிரப்ப வேண்டிய பொறுப்பு சமஸ்தானத்தின் திவான் டி.ஆர். பார்த்தசாரதி அய்யங்கார் தலையில் வந்து விழுந்திருந்தது. திவான், மார்பின் குறுக்கே ஓடிக்கிடந்த பூணூலை விரல்களால் நீவி விட்டுக்கொண்டு, குடுமியை அள்ளி முடிந்துகொண்டு கஜானா குறித்தும் அதை எப்படி நிரப்பலாமென்றும் சிந்திக்கலானார். ஒன்றைக் குறித்து பலவாறு ...