புதுக்கோட்டை எழுத்தாளர் - 01
#அகிலன் - சித்திரப்பாவை. நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள் இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே".
புதுக்கோட்டை எழுத்தாளர் -02
#புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர்.
மகத்தான சிறுகதை எழுத்தாளர். நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்". பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை, #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று.
புதுக்கோட்டை எழுத்தாளர் - 03
#பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்கும் சொற்கள், சேகரிக்கத் தொடங்குகையில் #சேலம்_பொன்_குமார் அவர்கள் #அறந்தாங்கி_வட்டார_வழக்குச்சொல்_அகராதி எனும் இப்பிரதியை எனக்கு அறிமுகம் செய்தார். புதுக்கோட்டை மாவட்ட வட்டாரச் சொற்கள் சேகரிப்பின் முன்னத்தியான இப்பிரதியை #அகநி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
புதுக்கோட்டை எழுத்தாளர் -04
#ந.சோலையப்பன், புதுக்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது, #காவியம்_பல்சுவை_மாத_இதழ். ஒரு சிறுகதைக்காக #ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர். #நண்பர்கள்_குழு என்றொரு இதழ் நடத்துகிறார். #மண்_உப்பு என்கிற இந்தக் குறுநாவல் கடலை எல்லையாகக் கொண்டிராத சமஸ்தான கால புதுக்கோட்டையில் #உப்பு_காய்ச்சி மன்னராட்சிக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்த உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு, மர்ம கதையாக புனையப்பட்டது.
புதுக்கோட்டை எழுத்தாளர் -05
#முனைவர்_தெ_திருஞானமூர்த்தி, புதுக்கோட்டையில் வசித்து வரும் இவர், #மேலைச்சிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது #மாணிக்கத்தடம் எனும் இந்நூல் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்த்தொண்டை ஆய்வு செய்கிறது. திருக்குறளுக்குக் #குறள்_வடிவில் தெளிவுரை எழுதியவர் மாணிக்கனார். " தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும்; தரையில் முதலையை எதுவும்வெல்லும்"
புதுக்கோட்டை எழுத்தாளர் - 06
#சச்சின், ஆலங்குடியில் பிறந்தவர். மின்பொறியாளராக பணியாற்றுகிறார். நிலவை முடையும் கவிஞரான இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஆனந்த விகடன். கெட்டியான மொழி, அடர்ந்த சொற்கள், பூடகமான கவிதைகளால் கவனம் பெற்றவர். #ஷெர்லாக்_ ஹோம்ஸ் _ஜேம்ஸ்பாண்டாகிறார் என்கிற கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக்கொண்டார். இத்தொகுப்பில் இடம்பெற்ற #மாந்தளிர்_நிறப்பெண், மலர்களுக்கு லீவு விடுங்கள், உவமைக்குக் கட்டுப்படாதவள்,..போன்ற கவிதைகளால் பெருங்கவனிப்பிற்கு உள்ளானவர். தொடர்ந்து அவர் படைப்புகளைத் தர வேண்டும், என்பது என் பேரவா!
புதுக்கோட்டை எழுத்தாளர்- 07
#கவிவர்மன், பூர்வீகம் அறந்தாங்கி. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்ஸிஸ்ட் ) #மாவட்டச்_செயலர். முத்தன் பள்ளம் நாவல் வெளியீட்டின் போது, #வெற்றி_அல்லது_வீரமரணம் என்கிற இந்நூலைக் கொடுத்தார். முதல் சந்திப்பும் அதுவே. #இளைஞர்_முழக்கம் இதழில் கவிதையில் தொடராக எழுதிய #சே_குவாரா வின் வாழ்க்கை வரலாற்று. " இறந்த பிறகும் திறந்தே இருந்த / #சேயின்_கண்கள் / உயிரோடிருப்பது போலவே / உறுத்தியது #ஏகாதிபத்தியத்தை / புதைக்கும் முன் / உலகையே ஆரத்தழுவிக்கொள்ளத்/ #துடித்தவனின்_கைகள் / மணிக்கட்டோடு_துண்டிக்கப்பட்டது/ #சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உயிரூட்டியவன்/ பூமியில் வந்து போன/ #முழுமையான_மனிதன்/ சே_குவாரா.
புதுக்கோட்டை எழுத்தாளர் - 08
#சிங்கமுத்து, புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழாசிரியர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நகரக் கிளைத் தலைவர். #தொடரும் காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். #யாவர்க்குமாய்_இல்லை_நாம் , இவரது முதல் கவிதைத் தொகுப்பு இருபது ஆண்டுகால கவிதையனுபவம். #மனிதர்களின்_சரணாலயக்_கவிஞர் இவர். பெரியோரிடத்தில் / மிகச் சிறியோனாக/ சிறியோரிடத்தில்/ மிகப் பெரியோனாக/ சீச்சீ.../ இதிலென்ன இருக்கிறது / மனிதனிடத்தில் மனிதனாக!/
புதுக்கோட்டை எழுத்தாளர் - 09
#ப.உமாபதி, #கரம்பக்குடி. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுகிறவர்.#இந்த_பூமியில்_நான்_கழித்த_பொழுதுகள், எனும் இந்நூல் சிறந்த தன்வரலாறு பிரிவில் தமிழ்நாடு அரசின் #தமிழ்_வளர்ச்சித்_துறை_விருது பெற்றது. தத்துவம், மெய்யியல் சார் நூல்கள் எழுதியுள்ளார். இந்நூல், அவரது வாழ்க்கை வரலாற்றினூடே புதுக்கோட்டை ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மேற்கு அரண்மனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக மாற்றப்பட்ட கால நிகழ்வுகளைப் பேசுகிறது.
புதுக்கோட்டை எழுத்தாளர்
#கந்தர்வகோட்டை, #முதுகுளம் கிராமத்தில் பிறந்தவர் ந.சுலோச்சனா. கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்#தமிழ்த்துறை_உதவிப்_பேராசியராக பணியாற்றுகிறார். இவரது கணவர் திரு சகாதேவனும் எழுத்தாளரே. இவரது பெயரின் பிற்பகுதியைச் சேர்த்து #மனுசியப்புத்திரியும்_தேவனும் என நீளமான புனைப்பெயராகக் கொண்டிருக்கிறார். தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் பாகுபாடு, சாதிய வன்முறை, மாணவர்களிடம் எதிர்கொண்ட சாதியஅவமதிப்பு,... இவற்றைத் தோழிகளுக்குச் சொல்வதைப் போல எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு, #அன்புள்ள_தோழி. இத்தொகுப்பில் காதலுக்கு இவ்வாறாக ஒரு வரையறை தருகிறார். " எதுவாகட்டும் தோழி... வெளிச்சத்தைச் சுற்றும் விட்டில்கள்/விளக்கையே எரித்துவிடும் வித்தைதான்/காதல்...
புதுக்கோட்டை எழுத்தாளர்
#ரெ_இராமையா, #கம்பன்_கழகத்-தலைவர். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கட்டப்பட்டு இன்டர்மீடியட் என்கிற இடைநிலை வகுப்பு தொடங்கப்பட்ட காலத்தில் படித்தவர். #பாழ்படுத்தப்பட்ட_ஒரு_அழகிய_நகரம் எனும் இச்சிறு நூல் புதுக்கோட்டை நகர் சுற்றியுள்ள குளங்கள், அழகான நகர வீதிகள் குறித்து பேசுகிறது. #மேஜர்_பிளாக்_பர்னே என்கிற ஆங்கிலேயர் யோசனையில் உருவாக்கப்பட்ட நகரம் புதுக்கோட்டை. இன்றைய மாவட்ட ஆட்சியர் குடியிருக்கும் பங்களாவில் முதலில் தங்கியவர், மன்னரைக் கண்காணிக்க பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்ட அதிகாரி #டாட்டன்ஹாம். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட , அவரது உடல் தஞ்சை சாலையிலுள்ள -மாதா_கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறை வாசகம் இது, " Here lies an Englishman who loved pudukottai state and its people "
#மு.கீதா, தேவதா தமிழ் என்றும் அறியப்படுகிறவர். புதுக்கோட்டையில் வசித்துவரும் இவர் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், #வீதி_கலை_இலக்கிய_களம் ஒருங்கிணைப்பாளர். 'கவிதை எழுதும் போது உயிருடன் இருப்பதாக உணர்கிறேன்' என்பதாகக் கூறும் அமெரிக்கக் கவிஞர் #லூயிஸ்_எலிசபெத்_க்ளூக் உள்ளிட்ட பதினைந்து உலகக் கவிஞர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. நம்மூர் கவிஞர்களில் ஔவை, கவிக்குயில். கிரேக்க கவிஞர் #சாஃபோவுக்குச் சிலை இருந்தது, என்பதாக ஒரு குறிப்பு. #வல்லினச்_சிறகுகள் இதழில் தொடராக எழுதிய #உலகப்_பெண்_கவிஞர்_யார்_எவர்? என்கிற இந்நூல் பெண்கள் வசிக்காத நாடு #வாடிகன்_சிட்டி போல, #ஆண்கள் இடம்பெறாத நூல் இது.
கருத்துகள்
கருத்துரையிடுக